தெரு விளக்குகள் தேவை

Update: 2023-02-01 06:50 GMT

ஈரோடு மூலப்பாளையத்தில் இருந்து ஆசிரம்பள்ளி வரை கரூர் ரோட்டின் இருபுறங்களிலும் மின் கம்பங்கள் உள்ளன. ஆனால் ஓரிரு மின் கம்பங்களில் மட்டுமே மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கே அச்சப்படுகிறார்கள். இதுதொடர்பாக பலமுறை மின்சார வாரியத்தில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அங்கு மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்