எரியாத உயர்கோபுர மின்விளக்குகள்

Update: 2023-01-25 18:05 GMT
பண்ருட்டி தாலுகா அண்ணாகிராமம் ஒன்றியம் கீழ்கவரப்பட்டு கிராமத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. ஆனால் இதில் உள்ள மின்விளக்குகள் பழுதாகி பல ஆண்டுகளாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே பழுதான உயர்கோபுர மின்விளக்குகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்