தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-01-18 16:14 GMT
திருச்சி மாவட்டம், ஆவராம்பட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மின்கம்பி அறுந்து விழுந்தால் உயிர் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்