சாலையின் நடுவில் மின்கம்பம்

Update: 2023-01-04 12:47 GMT

திசையன்விளை பேரூராட்சி மணலிவிளை தெருவில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. அப்போது தெருவின் நடுவில் இருந்த மின்கம்பத்தை அகற்றி ஓரமாக நடாமல், அதனைச் சுற்றிலும் சாலை அமைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக அந்த செல்லும் வாகனங்கள் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை தெருவின் ஓரமாக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்