மதுரை மாவட்டம் பொன்மேனி மாடக்குளம் மெயின் ரோடு வாகேஸ்வரி இரண்டாவது தெருவில் சில இடங்களில் தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் இந்த சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் உள்ள மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் எரியாத தெருவிளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.