விருதுநகர் மாவட்டம் சூலக்கரை மேட்டுப்பகுதியில் இருந்து தாதம்பட்டி வரை செல்லும் சாலையில் கண்மாய் அருகில் உள்ள பாலம் பகுதியில் போதிய மின்விளக்குகள் வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் இப்பகுதியில் கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகின்றன. இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கண்ட பகுதிகளில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பார்களா?