பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இரவு முழுவதும் மின் வினியோகம் அடிக்கடி நிறுத்தப்படுகிறது. இதனால் முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே முன்னறிவிப்பில்லா மின்தடையை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.