வாணிப்புத்தூர் பேரூராட்சி அண்ணா சிலை பஸ் நிறுத்தத்தில் 8 உயர்கோபுர மின்விளக்குகள் உள்ளன. இவற்றில் ஒரு விளக்கு மட்டுமே எரிகிறது. மற்ற 7 விளக்குகள் கடந்த ஒரு மாத காலமாக எரிவதில்லை. இதனால் அங்கு நின்று இரவு நேரங்களில் பஸ் ஏற பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே உயர்கோபுர மின்விளக்குகளை எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.