பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட காஜியார் தெருவில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.