புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது

Update: 2022-11-23 16:54 GMT

கிருஷ்ணகிரி மாவடடம் சூளகிரி அருகே எர்ரண்டப்பள்ளி கிராமத்தில் மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்து இருந்தது. கிராமத்தின் மைய பகுதியில் உள்ள இந்த மினகம்பம் எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ளது என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-பூபதி, எர்ரண்டப்பள்ளி, சூளகிரி.

மேலும் செய்திகள்