எரியாத உயர்மின்கோபுர விளக்கு

Update: 2022-11-23 12:00 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையிலிருந்து தஞ்சை- புதுகை தேசிய நெடுஞ்சாலை வழியாக வண்ணாரப்பட்டி பிரிவு சாலை அருகே உள்ள உயர்மின்கோபுர விளக்கு அமைத்து 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை. வண்ணாரப்பட்டி விளக்கு சாலை என்பது பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் அதிகமான வாகனங்கள் சாலையை கடந்து செல்கின்றன. எனவே இரவு நேரங்களில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்