உடைந்து விழும் நிலையில் மின்கம்பம்

Update: 2022-11-16 12:52 GMT

உடைந்து விழும் நிலையில் மின்கம்பம்

திருப்பூர் மாநகராட்சி 55-வது வார்டு பெரிச்சிபாளையம் தெற்கு அண்ணமார் காலனி 3-வது தெருவில் ரோட்டின் நடுவே பொதுமக்களுக்கு இடையூறாக மின்கம்பம் உடைந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் படுமோசமான நிலையில் உள்ளது. இதனால் இந்த தெருவில் ஒரு அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலைஉள்ளது. எப்போது வேண்டுமானாலும் இந்த மின்கம்பம் உடைந்து விழும் அபாயம் உள்ளது. இந்த உடைந்த மின்கம்பத்தை அகற்றாமல் கான்கிரீட் சாலை போடப்பட்டுள்ளது.பாதாள சாக்கடை பணிகளும் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த பகுதி மக்கள் பலமுறை மின்சார துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மாரிமுத்து,திருப்பூர்.

9597240622.

மேலும் செய்திகள்