திருச்செந்தூரில் இருந்து நா.முத்தையாபுரம், மறவன்விளை வழியாக உடன்குடிக்கு செல்லும் சாலையில் மறவன்விளை அம்மன் கோவில் அருகே பல ஆண்டுகளுக்கு நடப்பட்ட இரும்பு மின்கம்பம் சாலையின் நடுவே உள்ளது. தற்போது புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால் மின்கம்பத்தை அகற்றாமல் பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே அந்த மின்கம்பத்தால் பலமுறை விபத்துகள் நடந்துள்ளன. எனவே மின்கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.