பழுதான மின்விளக்கு

Update: 2022-11-13 13:38 GMT

கணபதிபுரம் பேரூராட்சிக்குக்கு உட்பட்ட ஆயிரங்கால் பொழிமுகம் எனப்படும் லெமுர் கடற்கரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், கடற்கரைக்கு வரும் இரவு அந்த வழியாக செல்லும் போது சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சுற்றுலா பயணிகள் நலன் கருதி பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லிங்கம், கணபதிபுரம்.

மேலும் செய்திகள்