மின்கம்பங்கள் மாற்றப்படுமா?

Update: 2022-11-13 13:37 GMT

சாமிதோப்பு கரும்பாட்டூர் ெரயில்வே கேட் அருகில் வயல்வெளியில் அந்த வழியாக உயர் அழுத்த மின்கம்பிகளுடன் கொண்டு செல்ல இரண்டு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்கம்பங்களின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் விவசாயிகள், பொதுமக்கள் பெரும் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சேதமடைந்த கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின்கம்பங்களை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.முத்துக்குமார், சாமிதோப்பு.

மேலும் செய்திகள்