மின்நுகர்வோர்கள் அவதி

Update: 2022-11-13 12:56 GMT
புதுக்கோட்டை மாவட்டம், மின்சார வாரியத்திற்கு தினமும் ஏராளமான மக்கள் மின்கட்டணம் செலுத்த வருகின்றனர். இதில் மின்கட்டணம் செலுத்தும் இடத்தில் முறையான வடிகால் வசதி இல்லாததால் தற்போது பெய்த மழைநீர் அங்கு குளம்போல் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் மின்கட்டணம் செலுத்த வரும் மின் நுகர்வோர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்