எரியாத உயர்கோபுர மின் விளக்கு

Update: 2022-11-13 12:55 GMT
புதுக்கோட்டையில் இருந்து கருவேப்பில்லான் ரெயில்வே கேட் வழியாக, மருத்துவ கல்லூரி செல்லும் புறவழிச் சாலையும், திருச்சி புறவழிச் சாலையும் இணையும் மைய சாலையில் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த உயர்கோபுர மின் விளக்குகள் கடந்த சில மாதங்களாக சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் போதிய வெளிச்சம் இன்றி அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்