ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2022-11-13 10:10 GMT

கோவை மாநகராட்சி 40-வது வார்டு வீரகேரளம் கண்ணப்ப நகரில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பழுதடைந்து ஒளிராமல் கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இது வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற காரணமாக அமைகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே தெருவிளக்குகளை சரி செய்து, மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்