புகார் பெட்டி செய்தி எதிரொலி; புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது

Update: 2022-11-09 16:04 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அவனிக்கோனேந்தல் பஸ் நிறுத்தம் அருகில் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளதாக மகாலிங்கம் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து சேதமடைந்த மின்கம்பத்துக்கு பதிலாக புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. கோரிக்கை
நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்