சிதிலமடைந்த மின்கம்பம்

Update: 2022-11-06 12:21 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே உள்ள பாண்டிபத்திரம் கிராமத்தில் மேலவீதியில் இருந்து கண்மாய்க்கரை செல்லும் சாலையின் ஓரத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டு அதில் இருந்து அருகில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் அந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியதன் காரணமாக சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்