மின் இணைப்பில் சிக்கல்

Update: 2022-11-03 05:32 GMT

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் 14-வது தெருவில் நிலத்தடி மின் இணைப்பில் பிரச்சனை உள்ளது. இதையடுத்து மின்வாரியம் தற்காலிகமாக இணைப்பு கொடுத்தது சரி செய்தது. தற்போது ஒரு மாதத்துக்கு மேலாகியும் இதுவரை இது குறித்து நிரந்தர தீர்வு காணப்படவில்லை. பருவமழை தொடங்கியுள்ளதால், மின் கம்பிகள் வெளியில் தெரியும் படி இருப்பது, ஆபத்தை உருவாக்கும். மின்வாரியத்துறை கவனித்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டால் ஆபத்து தவிர்க்கப்படும்.

மேலும் செய்திகள்