அடிக்கடி ஏற்படும் மின்தடை

Update: 2022-11-02 16:15 GMT
பழனி அருகே உள்ள ராசாபுரத்தில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் மின்விசிறி பயன்படுத்த முடியாமல் அவதிஅடைகின்றனர். அதே நேரத்தில் காற்றுக்காக கதவை திறந்து வைத்தால் விஷ பூச்சிகள் வீட்டுக்குள் வந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே மின்தடையை சரி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்