கூடலூரில் உள்ளஏழுமுறம் ஆற்று வாய்க்கால் நடுவே மின்கம்பம் ஒன்று உள்ளது. மழைக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மண் அரிப்பு ஏற்பட்டு மின்கம்பம் எந்த நேரத்திலும் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, மின்கம்பத்தை இடம் மாற்ற முன்வர வேண்டும்.