எரியாத உயர் கோபுர மின்விளக்கு

Update: 2022-11-02 12:45 GMT
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், விஜயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகடை தெரு பகுதியில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த 2 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளும், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதினால் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்