தெரு விளக்கு அமைக்கப்படாத மின்கம்பம்

Update: 2022-10-30 15:45 GMT

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி ஜங்ஷன் பஸ் நிறுத்த பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக இப்பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்க மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. மின்கம்பம் அமைக்கப்பட்டு சுமார் 6 மாதங்கள் கடந்தும் மின்கம்பத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்