ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2022-10-19 14:29 GMT

கோவை பூசாரிபாளையத்தை அடுத்த வேடப்பட்டி, வீரகேரளம் செல்லும் சாலைகளில் தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. அவை பழுதடைந்து கிடப்பதால், இரவு நேரங்களில் அந்த பகுதிகள் மிகவும் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்