பெரம்பலூர் மாவட்டம், பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையின் நடுவே மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த மின் விளக்குகள் இரவு நேரத்தில் சரிவர எரிவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி செல்கின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.