கண்ணை பறிக்கும் அறிவிப்பு பலகை

Update: 2022-10-16 16:06 GMT

அரியலூர் மாவட்டம், சின்ன வளையம் அருகில் திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலைப் பணிகள் நிறைவடைந்த நிலையில் மீன்சுருட்டி பகுதியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வரும்போது சின்னவளையம் மேம்பாலத்திற்கு முன்னதாக எல்.இ.டி. அறிவிப்பு பலகை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு பலகை பழுதடைந்த நிலையில் கடுமையான வெள்ளை ஒளியை உணர்ந்து வருகிறது. இதனால் மீன்சுருட்டி பகுதியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வரும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் கண் கூச்சத்தால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் அந்த பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை உடனடியாக சரி செய்து பெரும் விபத்தை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்