பெரம்பலூர் ரோஸ் கார்டன் பகுதியில் சுமார் 500 வீடுகளுக்கு மேல் குடியிருப்பு உள்ளது. மேலும் அதன் கிழக்கு பகுதியில் வேகமாக விரிவாக்கம் செய்யப்பட்டு சித்தர் கோவிலை நெருங்கிவிட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் தெரு விளக்கு இல்லாமல் வயதான பெரியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் இரவு நேரத்தில் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து நகராட்சிக்கு பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.