பழுதடைந்த மீட்டர் பெட்டி

Update: 2022-10-05 14:47 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் சாலமரத்துப்பட்டி ஊராட்சி ஓலப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் மின்சார வயர்கள் சேதம் அடைந்து சுவற்றில் மின்சாரம் பாய்கிறது. மேலும் மின்சார மீட்டர் பெட்டி பழுதடைந்த நிலையில் உள்ளது. மாணவர்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை சொல்லியும் சரி செய்யவில்லை. எனவே மாணவர்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக விபத்து ஏற்படும் முன்பு மின்சார வயர்களை சரி செய்ய வேண்டும்.

-சுதாகர், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்