திருச்செந்தூர் தாலுகா பூச்சிக்காடு விலக்கில் இருந்து கீழ நாலுமாவடி வழியாக வனத்திருப்பதி செல்லும் சாலையில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்த சாலையில் பொதுமக்கள் அச்சத்துடனே பயணிக்கின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, அங்கு சாலையோரம் போதிய மின்விளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.