மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2022-07-15 10:49 GMT
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் மணவாளநல்லூர் ஊராட்சியில், மணவாளநல்லூர் பஜனை மடத்தில் இருந்து திரவுபதி அம்மன் கோவில் வரை பொதுமக்கள் வசதிக்காக மின்கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த 30 நாட்களாக மின்கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதன் காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்