புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-09-30 15:32 GMT
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா கணக்கப்பிள்ளைவலசையில் 2-வது வார்டு முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சிமெண்டு பூச்சு பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக, அந்த ஊரை சேர்ந்த கண்ணன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக அந்த மின்கம்பம் சீரமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்