மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2022-09-30 15:32 GMT
சங்கரன்கோவில் பகுதியில் பழைய பஸ் நிலையத்தை இடித்துவிட்டு, புதிய பஸ் நிலையமாக புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்காலிக பஸ் நிலையமாக பெரியார் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த பஸ் நிலையத்தில் இருந்து கழுகுமலை ரோடு வரை சாலையோரம் மின்விளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் அச்சத்துடன் சென்று வரும் நிலை உள்ளது. எனவே அங்கு மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்