ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2022-09-30 13:52 GMT

பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையின் நடுவில் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. ஆனால் சில விளக்குகள் மட்டும் தான் ஒளிருகின்றன. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பஸ் நிலையம் அருகில் இருப்பதால் அங்கு நடந்து செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே ஒளிராத விளக்குகளை பராமரித்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்