காட்சி பொருளாக நிற்கும் மின்கம்பங்கள்

Update: 2022-09-29 15:55 GMT

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள உடையார்கோவில் கிராமத்தில் மின்வசதிக்காக புதிய மின்கம்பங்கள் நடப்பட்டன. ஆனால் மாதங்கள் பல உருண்டோடியும் தற்போது வரை மின்கம்பங்களில் மின்கம்பிகள் இணைக்கப்படாமல் உள்ளது. இதனால் மின்கம்பங்கள் காட்சி பொருளாக நிற்கிறது. மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ள காரணத்தில் அந்த பகுதியில் அடிக்கடி மின்வெட்டு, மின்தடை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பங்களில் மின்கம்பிகளை இணைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்