சென்னை, அண்ணா சாலை சிம்சன் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மின் இணைப்பு பெட்டி மிகவும் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியே நடந்து செல்லும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய வேண்டும்.