உயர் மின் கோபுரம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-29 14:18 GMT
அரியலூர் மாவட்டம் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வி.கைகாட்டி ஆகும். இங்கு அமைந்துள்ள மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மின்விளக்கு அவ்வபோது எரிந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அதிக வேக காற்று வீசியதில் பழுது ஏற்பட்டு எரியவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், கூலி தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்