பந்தலூர் அருகே ஏலமன்னா பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தெருவிளக்கு வசதி போதிய அளவில் இல்லை. அங்கு பொருத்தப்பட்டு உள்ள சில தெருவிளக்குகளும் பழுதடைந்து ஒளிராமல் கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியே இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே அங்கு தெருவிளக்கு வசதியை மேம்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.