விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் அழகாபுரி அருகே எம்.புதுக்குளம் கிராமத்தில் உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவுநேரத்தில் விஷபூச்சிகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால் இந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ஒளிராத தெருவிளக்குகளை அப்புறப்படுத்தி புதிய விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.