எரியாத உயர் கோபுர மின் விளக்குகள்

Update: 2022-07-14 16:56 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே 3 ரோடுகள் சந்திக்கும் இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 ரோடு பகுதிகளுக்கும் வெளிச்சம் தரும் வகையில் 7 மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த பல நாட்களாக 5 விளக்குகள் எரியாததால் அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்