மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள தரைப்பாலத்தின் மின்விளக்குகள் எரியவில்லை. இதன் காரணமாக அப்பகுதியில் சிலர் மது அருந்துகின்றனர். இதனால் அவ்வழியாக செல்பவர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. எனவே மின்விளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.