உடன்குடி அருகே சீர்காட்சி- பிச்சிவிளை ரோட்டில் உள்ள தனியார் தோட்டத்தில் உள்ள மின்கம்பம் முறிந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் மின்வினியோகம் செய்யப்படாததால், அங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. எனவே, புதிய மின்கம்பம் அமைத்து மின்வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.