மின்மோட்டார் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-23 15:15 GMT

அரியலூர் மாவட்டம், வெற்றியூர் கிராமத்தில் மூப்பனார் ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து தொட்டியில் நிரப்பி அப்பகுதி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மின்மோட்டார் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்