சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் ஊராட்சி வைகைவடகரை பகுதியில் பல நாட்களாக தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இருள் காரணமாக பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே எரியாத தெருவிளக்குகளை மாற்றியமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.