மின்கம்பியில் உரசும் முட்செடிகளால் விபத்து அபாயம்

Update: 2022-09-22 11:28 GMT
மதியாகதுருகம் அருகே சடையங்குளத்தில் இருந்து சின்னமாம்பட்டு செல்லும் மின் கம்பிகளின் மூலம் விவசாய மின் மோட்டார்கள் மற்றும் வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு செல்லும் மின் கம்பிகளில் முட்செடிகள் உரசுவதோடு அதில் சிக்கி படர்ந்துள்ளது. இதனால் காற்று பலமாக வீசும்போது மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து முட்செடிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்