ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-09-21 10:31 GMT

ஆனைமலை அடுத்த சுப்பைகவுண்டன்புதூரில் உள்ள மின்கம்பம் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளே உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து விழும் அபாயம் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்லும்போது மிகவும் அச்சப்படுகிறார்கள். அதனால் ஆபத்தாக காணப்படும் மின்கம்பத்தை அகற்றிவிட்டு மாற்று மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவர்களா?

ரித்விக், ஆனைமலை.

மேலும் செய்திகள்