விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா கனஞ்சாம்பட்டி ஊராட்சி க.சத்திரப்பட்டி கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் என்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் ஒருவித அச்ச உணர்வுடனே இந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே சேதமடைந்த மின்கம்பத்தை விரைவாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.