பழுதான சோலார் மின்விளக்கு

Update: 2022-09-20 11:00 GMT
தியாகதுருகம் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் சோலார் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.. இந்த மின் விளக்குகள் பழுதடைந்ததன் காரணமாக கடந்த 10 நாட்களாக பயணிகள் நிழற்குடை இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் அச்சம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்