பள்ளி வளாகத்துக்குள் மின்கம்பம்

Update: 2022-09-15 15:06 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் பகுதி இடையக்காடு புதுக்குளம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் கழிவறை உள்ள பகுதியில் மின்கம்பம் ஒன்று உள்ளது. மின்கம்பத்தை சுற்றி செடிகள், வளர்ந்துள்ளன. மேலும், மின்கம்பத்தில் இருந்து வரும் எர்த் கம்பிகளும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து சென்று வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் மின்கம்பத்தினால் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டு விடுமோ? என பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி வளாகத்துக்குள் இருக்கும் மின்கம்பத்தை வேறு இடத்தில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்